Please Click the link & get 2000 Rs instantly

Thursday 26 July 2018

Tamilnadu Educational News - 27/07/2018

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன

3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்

மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்
10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது
இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு; ஜூலை31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த அவகாசம் மேலும் ஒரு மாதம்நீட்டித்து உத்தரவு!

CBSE - 214 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், விடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்றவர்களுக்கு, 1.5 கோடி விடைத்தாள்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் திருத்தப்பட்டன.இவற்றில், 66 ஆயிரத்து, 876 பேர், மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.

 இதில், 4,632 பேருக்கு மட்டும், மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் மாறின.இந்நிலையில், மதிப்பெண்கள் மாறிய மாணவர்களுக்கு, ஏற்கனவே விடைத்தாள் திருத்தியவர்களின் பட்டியலை, சி.பி.எஸ்.இ., சேகரித்தது. இதில், மதிப்பீட்டில் தவறு செய்த, 214 ஆசிரியர்கள்,  'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

தமிழகத்திலேயே முதன்முதலாக துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கியூஆர் கோடு பதிந்த அடையாள அட்டை

கரூர் அருகே உள்ள வெள்ளியணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 87 மாணவர்கள், 69 மாணவிகள் என 156 பேர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. அனைத்து மாணவ மாணவியருக்கும் கியூஆர் கோடு எனப்படும் கோடு பதிந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை மூலமாக மாணவர்களின் செயல்பாடுகளையும், வீட்டுபாடங்களையும் பெற்றோர் தங்களது செல்போன் மூலமாகவே தெரிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
தேர்வு கால அட்டவணை வகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு

1 முதல் 8 வரை

செப்.17 - 22 டிச.17 - 22ஏப்., 10 - 18

9 முதல் பிளஸ் 2 வரை

செப்.10 - 22  டிச.10 - 22 ஏப்., 8 - 18

தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2 டிச.23 - ஜன.1 ஏப்., 19 - ஜூன் 2

வதந்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சேவைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் எனப்படும் தகவல் பரிமாற்ற சேவையை, உலகம் முழுவதும், 130 கோடி பேர், பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் மட்டும், 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர்.இதன் வாயிலாக, தவறான தகவல்களும், வதந்திகளும் எளிதில் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, நாடு முழுவதும், பல அப்பாவிகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், சமீபத்தில் நடந்தன.இதையடுத்து, வதந்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த, தொழில்நுட்ப ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி, வாட்ஸ் ஆப் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியது

பி.எப்., நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி
சென்னை : அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பி.எப்., என்ற வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுகிறது.
அந்தத் தொகைக்கு ஏப்., 1 முதல் ஜூன் 30 வரை 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. மீண்டும் ஜூலை 1 முதல் செப்., 30 வரை பி.எப்.,புக்கு 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment